இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – மத்திய அரசின் புதிய உத்தரவு!
இந்தியாவில் ஆதார் மற்றும் பான் கார்டு முக்கிய ஆவணங்களாக விளக்குகிறது. இதில் பான் கார்டு அனைத்து பண பரிமாற்றத்திற்கு அவசிய ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பான் கார்டு:
இந்தியாவில் வருமான வரித்துறையினரால் பான் கார்டு வழங்கப்படுகிறது. இந்த பான் கார்டு வரி, பணப் பரிமாற்றங்கள், கடன்கள், முதலீடுகள், நிலம் வாங்குதல் மற்றும் விற்றல் மற்றும் இதர செயல்பாடுகளுக்கு பான் கார்டு அவசியமாகிறது. தற்போது பான் கார்டை நேரடியாகவும் ஆன்லைன் மூலமும் விண்ணப்பித்து பெறலாம். இந்த பான்கார்டை பெற வங்கி அறிக்கை ,ரேஷன் கார்டு , அடையாள அட்டை பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்கள் தேவை. அதே போல ஆதாரும் முக்கிய ஆவணமாக உள்ளது. நாட்டில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்த ஆதார் ஒவ்வொரு குடிமகனின் அடையாளமாக திகழ்கிறது.
WhatsApp பயனாளர்களுக்கான புதிய அப்டேட் – Delete for everyone செய்ய கூடுதல் கால அவகாசம்!
இதனையடுத்து, ஆதார் எண்ணை பான் கார்டு, மொபைல் எண், வங்கி கணக்கு ஆகியவற்றுடன் இணைக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ஒரு நிதியாண்டில் 20 லட்சத்திற்கு மேல் பணம் டெபாசிட் செய்ய பான் கார்டு அல்லது ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் நடப்புக் கணக்கு அல்லது ரொக்க கடன் கணக்கைத் தொடங்குவதற்கும் ஆதார் மற்றும் பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு பொருந்தும்.
Exams Daily Mobile App Download
மேலும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு அரசு கால அவகாசத்தை அளித்தது மேலும் இந்த காலகெடுவை நீட்டிப்பும் செய்தது. நாட்டில் வரி ஏய்ப்பை தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் எண்ணுடன் ஆதார் எண்னை இணைப்பது அவசியம். ஒரு வேளை நீங்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வில்லை என்றால் இல்லையெனில் பான் நம்பர் செயலிழக்கக் கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் விரைந்து ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்படுகிறது.