SBI வங்கி வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || ரூ.27 லட்சம் வரை ஊதியம்…!
பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள System Officer, Executive, Sr. Executive பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள System Officer, Executive, Sr. Executive பணிக்கு என மொத்தமாக 35 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E / B.Tech, MCA, M.Tech, M.Sc போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- System Officer (Project Manager), Senior Executive (Project Manager), Senior Special Executive (Project Manager) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Project Management Institute மூலம் கட்டாயம் PMP சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 2 வருடங்கள் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.27 லட்சம் வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
- விண்ணப்பதாரர்கள் Online Written Test, Interview, Shortlisting மற்றும் CTC Negotiation மூலம் தேர்வு செயய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.750/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் SC/ST/PWD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.