தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை!
தமிழகத்தில், வரும் ஜூன் மாதம் 13ம் தேதியன்று துவங்க இருக்கும் புதிய கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் அளித்துள்ளார்.
சனிக்கிழமை விடுமுறை
கொரோனா பேரலை தொற்று நிமித்தமாக கடந்த 2021-22ம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தாமதமாக தொடங்கப்பட்டு சமீபத்தில் தான் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த வகையில், 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கடந்த 13ம் ஆண்டு தேதியன்று இறுதித் தேர்வு முடிவடைந்தவுடன் கோடை விடுமுறை துவங்கியது. மற்றபடி, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த வாரத்தில் இருந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இப்போது பள்ளி மாணவர்களுக்கான புதிய கல்வியாண்டு வரும் ஜூன் மாதம் 13ம் தேதியன்று துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அமல் – போக்குவரத்துக்கு அனுமதி!
இது குறித்த அறிவிப்பில், 1 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதியன்றும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 27ம் தேதியன்றும் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்க இருக்கிறது. இதனை தொடர்ந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 20ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில், வரும் 2022-23ம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். அதாவது, புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி முதல் துவங்க இருக்கும் நிலையில், இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வேலை நாட்களாக செயல்படும் என்றும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை தற்போது மாணவர்கள் மத்தியில் இருந்து வரவேற்புகளை பெற்றுள்ளது.