முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அமல் – போக்குவரத்துக்கு அனுமதி!
ஷாங்காய் நகரில் கடந்த சில மாதங்களாக விதிக்கப்பட்டிருக்கும் கொரோனா தொடர்பான முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இப்போது பொது இடங்கள், போக்குவரத்து ஆகியவை மீண்டும் அனுமதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
கடந்த 2 வருடங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா புதிய பாதிப்புகளை பதிவு செய்து வந்த சீனாவின் ஷாங்காய் நகரத்தில் ஒரு சில மாதங்களாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இதற்கிடையில் ஷாங்காயில் கொரோனா நேர்மறை வழக்குகள் 500க்கும் குறைவாகப் பதிவாகியுள்ளதால், தற்போது அந்நகரம் முழுவதும் தளர்வுகளை அளிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. அதன்படி, இரண்டு மாதம் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடந்த மே மாதம் 23ம் தேதி முதல் ஷாங்காய் நகரத்தில் பொது இயக்கத்தில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இதற்கிடையில், ஜூன் 1 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்குவதற்கு முன், இந்த மாதத்தில் பெரும்பாலான நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை வைத்திருக்க விரும்புவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அப்போதும் கூட பொது இடங்களில் 75% திறனில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்னதாக, ஷாங்காய் நகரம் பூஜ்ஜிய கொரோனா இடமாக அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த வாரத்தில் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அதிகாரிகள் அனுமதித்தனர்.
Exams Daily Mobile App Download
மேலும் பல பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்களை மீண்டும் திறக்கவும் விநியோகங்களை வழங்கவும் அனுமதிக்கப்பட்டது. இதனிடையே ஷாங்காய் நகரத்தில் உள்ள அலுவலக ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது நகரத்தில் கொரோனா தொற்று சூழ்நிலை மேம்பட்டு வருவதால் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு மக்கள் மீண்டுமாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பது சுமார் 25 லட்சம் குடியிருப்பாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.