தமிழகத்தில் நாளை ( சனிக்கிழமை) சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை – பதிவுத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் கடந்த ஆண்டு முதல் சனிக்கிழமைகளும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
விடுமுறை:
தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் கொரோனா காலத்திற்கு முன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது விடுமுறை அளிக்கப்படும். இதனால் பொதுமக்கள் தங்களின் பதிவு அலுவலகம் சார்ந்த வேலைகளை வார நாட்களில் மட்டுமே செய்ய வேண்டி இருப்பதாகவும், இதனால் சரிவர பணிகளை முடிக்க முடியவில்லை என்றும் புகார்கள் எழுந்தது.
எச்சரிக்கும் பொருளாதார வல்லுனர்கள்.. அன்னிய செலாவணி இருப்பு குறைவு – திவாலாக போகும் பாகிஸ்தான்!!
Follow our Instagram for more Latest Updates
இதனை கருத்தில் கொண்டு கடந்த 2022 ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்று வணிகவரித்துறை அமைச்சர் அறிவித்தார். அலுவலகங்களில் பணியாற்றும் மக்கள் இந்த சனிக்கிழமை வேலை நாட்களை பயன்படுத்தி பத்திர பதிவு பணிகளை செய்து வருகின்றனர்.
தற்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் கால விரயத்தை குறைக்கும் வகையில் ஆன்லைன் வாயிலாக பத்திர பதிவு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து சனிக்கிழமைகளிலும் சேவையாற்றி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளிக்க வேண்டி தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நாளை (ஜன. 13) தமிழகத்தில் சனிக்கிழமைகளில் செயல்பட்டு வந்த 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என பதிவுத் துறை தெரிவித்துள்ளது.