தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமனம் – ரூ.5 கோடி ஒதுக்கீடு!!

0
தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமனம் - ரூ.5 கோடி ஒதுக்கீடு!!
தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமனம் - ரூ.5 கோடி ஒதுக்கீடு!!
தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமனம் – ரூ.5 கோடி ஒதுக்கீடு!!

தமிழகத்தில் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி கிடைக்கும் விதமாக தற்போது அரசு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விளையாட்டு துறை

தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்த பல்வேறு வகையான நலத்திட்டங்களை அரசு செயற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களிடம் விளையாட்டு துறை மீதான ஆர்வம் அதிகரிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் தொடர்பான விழிப்புணர்வும், பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நாளை ( சனிக்கிழமை) சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை – பதிவுத்துறை அறிவிப்பு!

Follow our Instagram for more Latest Updates

இதை தொடர்ந்து, மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீர, வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது. இதையடுத்து தற்போது, தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்க வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிப்பதற்கு அரசு சார்பாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வெளிநாட்டு பயிற்சியாளர்கள் டென்னிஸ், தடகளம், நீச்சல், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு 11 மாதங்கள் வரை பயிற்சிகளை வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!