தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1 முதல் 5 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை தோறும் விடுமுறை அளிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த பிறகு கடந்த 2021 செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு. அரையாண்டு விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுக்கத் தொடங்கியதால் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் 15 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ECHS வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க !
இதன் விளைவாக கொரோனா பாதிப்புகளில் மக்கள் மீண்டு வரும் நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. வெகு நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் சனிக்கிழமைகளிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் அதிகமாக இருக்கும்.
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
அந்த வகையில் தற்போது ஏப்ரல் மாதத்தில் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. அதனால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்தது. தற்போது நிலவி வரும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசு பரிந்துரை செய்து வந்தது. இதையடுத்து தமிழக அரசு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சனிக்கிழமைகள் தோறும் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.