ராதிகாவை வெளுத்து வாங்கிய பாக்கியா – மிரண்டு போன கோபி! சீரியலில் புதிய திருப்பம்!
பாக்கியா சமைத்துக் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட குழந்தைகள் அனைவருமே மயங்கியதால் பாக்கியாவை ராதிகா கண்டபடி திட்டுகிறார். இதனால், பதிலுக்கு பாக்கியாவும் கோவப்படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ராதிகாவை கோபி திருமணம் செய்துவிடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இத்தனை வருடங்களாக கண்ணும் கருத்துமாக பாத்துக்கொண்ட பாக்கியாவை விட்டுவிட்டு ராதிகாவை தான் கோபி தாங்கி கொண்டிருக்கிறார். தற்போது மயூவின் பிறந்தநாளுக்காக 100 அனாதை குழந்தைகளுக்கு சமைத்து தரும்படி பாக்கியாவிடம் ராதிகா ஆர்டர் கொடுத்திருந்தார். குழந்தைகள் சாப்பிடுவதால் கொஞ்சம் கூட காரம் கூடிவிட கூடாது என்பதில் இருந்து அனைத்தையுமே பார்த்து பார்த்து சமைத்தார்.
பாரதியுடன் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ள கண்ணம்மா – துரத்தி விட பிளான் போடும் பாரதி!
ஆனால், பாக்கியா சமைத்துக் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட குழந்தைகள் அனைவருமே மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாக்கியா தான் உணவில் ஏதேனும் கலந்திருக்க கூடும் என நினைத்து பாக்கியாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ராதிகாவையும் போலீசார் விசாரிக்க அழைத்து செல்கிறார்கள். பாக்கியாவை நம்ப வேண்டாம் என கோபி எவ்வளவு சொல்லியும் நான் தான் கேட்கவில்லை. கடைசியில் என்னை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விட்டார் என பாக்கியா மீது ராதிகா கொலைவெறியில் இருக்கிறார்.
பாக்கியாவை காப்பாற்ற வேண்டுமென கோபிக்கு குடும்பத்தில் உள்ள அனைவருமே கால் செய்கின்றனர். ஆனால், கோபி யாரின் காலையும் அட்டென்ட் செய்யவேயில்லை. பின்பு, ராதிகாவை மட்டும் கோபி மறைமுகமாக காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து செல்கிறார். ராதிகா சென்ற பிறகு, உணவில் நஞ்சை கலந்ததிற்கும் பாக்கியாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என போலீசாரிடம் நிரூபித்து பாக்கியாவை எழில் தான் வீட்டிற்கு அழைத்து செல்கிறார். பின்பு, ராதிகா பாக்கியாவை உங்களை நம்பியதிற்கு நன்றாக செய்துவிட்டிர்கள் என கூறி சண்டை போடுகிறார். ராதிகாவிடம் பாக்கியா மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்த்த சமயத்தில் பாக்கியா கோவப்படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.