சமந்தா, நாக சைதன்யாவை ஒரே படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்யும் இயக்குனர் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ஓ பேபி திரைப்படத்தின் போதே இயக்குனர் நந்தினி ரெட்டி சமந்தா, நாக சைதன்யாவை வைத்து மீண்டும் படம் எடுக்க முடிவு செய்தார். ஆனால் தற்போது இருவரும் விவாகரத்து பெற்றுள்ள நிலையில் இருவரையும் நடிக்க வைக்க தற்போதும் முயற்சி செய்து வருகிறார்.
சமந்தா, நாக சைதன்யா:
நாக சைதன்யாவும் சமந்தாவும் பல ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து அதன் பிறகு விவாகரத்து பெற்று கொண்டார்கள். இவர்களின் திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகளாக சுமூகமாகவே சென்ற நிலையில் திடீரென விவாகரத்து செய்ய போவதாக அறிவித்தனர். இவர்களின் விவாகரத்து செய்தி திரையுலக வட்டாரத்தில் மிக பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விவாகரத்து முடிவை மாற்றிக்கொள்ளும்படி திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவுக்கு ஆப்பு வைத்த புதிய நபர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அடிக்கடி இருவரும் சேர்ந்து வாழப் போவதற்கான செய்தியும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. அதாவது சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த விவாகரத்து குறித்தான பதிவை நீக்கினார். இதனால் இருவரும் மீண்டும் இணைய போகிறார்களோ என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால் அது வெறும் செய்தியாகவே முடிந்துவிட்டது. தற்போது நாக சைதன்யா மற்றும் சமந்தா குறித்தான செய்தி ஒன்று பரவி வருகிறது. அதாவது ஓ பேபி படத்தின் இயக்குனரான நந்தினி ரெட்டி நாக சைதன்யா மற்றும் சமந்தாவை வைத்து படம் எடுக்க ஒப்புதல் வாங்கியிருந்தார்.
புது காரில் குழந்தை உடன் பயணித்த ஆலியா, சஞ்சீவ் ஜோடி – ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!
ஆனால் தற்போது இருவரும் விவாகரத்து செய்துவிட்ட நிலையில் அந்த திரைப்படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது சமந்தாவிற்கு பதிலாக வேறு பெண்ணை நடிக்க வைப்பதாக பேச்சு வார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. சமந்தா, நாக சைதன்யாவை நடிக்க வைக்க நந்தினி ரெட்டி மிகவும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் இருவருமே அதற்கு ஒத்துவராத காரணத்தினால் தான் வேறு நடிகையை நடிக்க வைக்க இயக்குனர் முடிவெடுத்திருக்கிறார்.