மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.40,000 வரை சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநில அரசுத்துறையில் பணிபுரிந்து 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அவர்களின் சம்பளம் ரூ.40,000 வரை அதிகரிக்க இருக்கிறது.
சம்பள உயர்வு
மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து வருகிறது. அந்த வகையில் இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இப்போது சமீபத்தில் வெளிவந்துள்ள செய்தியின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரிக்க மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு மொத்த DA தொகையை 5 தவணை பாக்கியாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதில் 2 தவணைகளை அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – குடும்ப ஓய்வூதியம் குறித்த விளக்கம்!
இப்போது மூன்றாவது தவணைக்கான DA தொகையை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த முடிவால் மகாராஷ்டிரா மாநில அரசின் சுமார் 17 லட்சம் ஊழியர்கள் நேரடியாகப் பயன்பெற உள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த 2019ம் ஆண்டில் மாநில அரசு ஊழியர்களுக்கும், ஜில்லா பரிஷத் மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கும் 7வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, 2019-20ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் 5 தவணைகளாக ஊழியர்களுக்கு DA நிலுவைத்தொகை வழங்க அரசு முடிவு செய்தது. அந்த வகையில் இதுவரை ஊழியர்களுக்கு 2 தவணைக்கான DA கிடைத்துள்ளன.
Exams Daily Mobile App Download
இப்போது மகாராஷ்டிரா மாநில அரசு, ஊழியர்களுக்கான மூன்றாவது தவணை DA தொகையை ஜூன் மாதம் செலுத்தலாம் என்று தெரிகிறது. இதன் பின்னர், நான்காவது மற்றும் ஐந்தாவது தவணை செலுத்தும் பணியும் இந்த ஆண்டு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது அரசின் இந்த முடிவால், 7வது ஊதியக் குழுவின் கீழ் உள்ள குரூப் ஏ அதிகாரிகளுக்கு சுமார் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் அதிகரிக்கும். அதே போல குரூப் பி அதிகாரிகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை பலன் கிடைக்கும். மேலும் குரூப் சி அதிகாரிகள் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையிலும், நான்காவது பிரிவில் உள்ளவர்கள் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரையிலும் பலன் பெறுவார்கள்.