ஐடி நிறுவன ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 25% வரை சம்பளம் உயர வாய்ப்பு!
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே ஐடி நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியடைந்து வருவதால் தற்போது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதாவது ஊழியர்களின் திறனை பொறுத்து 25% வரைக்கும் சம்பளம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு:
நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விஸ் லிமிடட், Infosys, HCL முதலிய நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த கொரோனா காலகட்டத்தில் கூட TCS, Infosys, HCL முதலிய நிறுவனத்தின் வளர்ச்சி தடைபடவில்லை. தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் ஊழியர்களை பணியில் அமர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு – 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!
இந்த நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைத்து வருகின்றனர். தற்போதைக்கு மூத்த ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு சென்று வேலை செய்து வருகின்றனர். அதாவது 5 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களில் வேலை செய்து வருகின்றனர். இந்த ஆண்டில் பாதியில் அடுத்தகட்ட ஊழியர்கள் அலுவலகங்களுக்கு செல்ல இருக்கின்றனர். இந்நிலையில், டாடா கன்சல்டன்சி சர்விஸ் லிமிடட் நிறுவனம், Infosys, HCL போன்ற நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வையும் வழங்க திட்டமிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு 12 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை சம்பள உயர்வை வழங்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், அதிக திறன் கொண்ட ஊழியர்களுக்கு 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரைக்கும் கூட சம்பளம் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. HCL நிறுவனமும் 21.9% வரைக்கும் சம்பளம் உயர வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. கூடுதலாக 23.8% ஊழியர்களை பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளது. மேலும், HCL நிறுவன ஊழியர்களுக்கு ஒரு ஆண்டிற்கான சம்பளத்தை ரூ.3-3.6 லட்சத்தில் இருந்து ரூ.4.25 லட்சமாக உயர்த்தியுள்ளது.