மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் 4% வரைக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இருமுறையாவது பணி உயர்வு மற்றும் சம்பள உயர்வு முதலான சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. எப்போதும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி மார்ச் மாதத்தில் உயர்த்தப்படும் மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கும். கொரோனா காலகட்டத்தில் மட்டுமே 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக இருந்தது. தற்போது மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 34 சதவீதமாக உள்ளது.
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு ஒரே நாளில் 2 அறிக்கைகள்!
இந்நிலையில் ஜூலை மாதத்தில் மீண்டும் 4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 4 சதவீதம் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைத்தால் சம்பளம் ரூ. 27,000 வரைக்கும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் இருந்து குறியீட்டில் சரிவு ஏற்பட்டு வருகிறது. ஜனவரி மாதத்தில் 125.1 ஆகவும், பிப்ரவரி மாதத்தில் 125 ஆகவும், மார்ச் மாதத்தில் 126 ஆகவும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் 126 க்கும் மேல் இருந்தால் கண்டிப்பாக DA 4 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டால் ஜூலை மாத சம்பளத்தோடு உயர்த்தப்பட்ட பணத்தை நிலுவைத் தொகையுடன் பெறலாம். ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ 56,900 எனில், DA ரூ.19,346 பெற்று கொண்டிருக்கிறார் என்றால் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு 38 சதவிகிதம் என்ற விகிதத்தில் டிஏ ரூ.21,622 ஆக அதிகரிக்கும். மேலும், ஊழியர்களுக்கு சம்பளம் ஆண்டுக்கு ரூ.27,312 என்கிற விகிதத்தில் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.