ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு ஒரே நாளில் 2 அறிக்கைகள்!

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - மத்திய அரசு ஒரே நாளில் 2 அறிக்கைகள்!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - மத்திய அரசு ஒரே நாளில் 2 அறிக்கைகள்!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு ஒரே நாளில் 2 அறிக்கைகள்!

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், நேற்று திடீரென்று “எந்த ஒரு நிறுவனத்திற்கும் ஆதார் நகல்களை மக்கள் அளிக்க கூடாது என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் இந்த அறிக்கை அதிக சர்ச்சையை கிளப்பியது. இதனால் மத்திய அரசு மீண்டும் மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இரண்டு அறிக்கைகள்:

ஆதார் கார்டு என்பது இந்தியாவில் முக்கிய ஆவணமாக உள்ளது. அத்தியாவசியம் என்ற நிலையில் இருந்து ஆதார் கார்டு கட்டாயம் என்ற நிலைக்கு இந்திய மக்கள் அனைவரும் வந்துவிட்டனர். இதையடுத்து ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்குமாறு தொடர்ந்து மத்திய அரசு அவகாசம் அளித்துக் கொண்டே வருகிறது. ஆனாலும், ஆதார் கார்டு பாதுகாப்பானதா என்ற கேள்வியின் சர்ச்சை மட்டும் உச்சநீதிமன்றம் வரை சென்று விசாரணையில் இருந்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் ஆதார் பாதுகாப்பானது இல்லை என்றும், பயனாளர்களின் தகவல்கள் அதன் மூலம் திருடப்படுவதாகவும் ஒரு வாதம் இருந்துகொண்டே இருந்தது.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அமல் – அரசு திட்டம்!

ஆதார் பயன்படுத்துவர்களின் தகவல்கள் அனைத்தும் பத்திரமாக பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு ஒவ்வொரு முறை உத்தரவாதம் அளித்துக்கொண்டே இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென மத்திய அரசிடம் இருந்து ஓர் அறிக்கை வந்தது, அது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அந்த அறிக்கையில், ஆதார் அட்டை நகலை யாரிடமும் வழங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, மாஸ்க்ட் ஆதார் எனப்படும் கடைசி 4 இலக்கங்கள் கொண்ட ஆதார் அட்டை எண்களை மட்டும் பயன்படுத்தவும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், கம்ப்யூட்டர் சென்டர் போன்ற இடங்களில் இ-ஆதார் அட்டையை டவுன்லோடு செய்யாதீர்கள் என்றும், ஒருவேளை அப்படிச் செய்தால் உடனடியாக அதை ‘டிலீட்’ செய்யுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆதார் எல்லாவற்றுக்கும் கட்டாயம் என்று கூறி விட்டு தற்போது அது பயன்படுத்துவது ஆபத்து என்று சொல்வது நியாயம் இல்லை என்று இணையத்தில் பலர் கேள்விகளை கேட்டு வருகின்றனர். இதையடுத்து, நேற்று காலையில் வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. ஆதார் இணையத்தின் பெங்களூர் பிராந்திய அலுவலகம் சார்பாக மாலையில்,மற்றொரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மத்திய அரசின் அறிவிப்புச் செய்தியை மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் இருப்பதை கருத்தில் கொண்டு, முன்னர் வெளியிட்ட சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!