மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.26,000 வரை சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.26,000 வரை சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.26,000 வரை சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.26,000 வரை சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு!

இப்போது 7வது சம்பளக் கமிஷனின் படி ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அரசாங்கம் ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்தினால் அவர்களுக்கு ரூ.26,000 வரை அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பள உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் 34% DA உயர்வை பெற்ற பிறகு, ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் நிலையில் இது தொடர்பர்க் அவ்வப்போது முரண்பாடான செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதாவது, இப்போது ஃபிட்மென்ட் காரணியை உயர்த்துவதற்கு அரசாங்கம் ஆதரவாக இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. இது தொடர்பான புதிய அறிக்கைகளின்படி, ஃபிட்மென்ட் காரணியை உயர்த்துவதற்கு அரசாங்கம் இப்போது ஆதரவாக இல்லை என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை, தேர்வின்றி தேர்ச்சி – வலுக்கும் கோரிக்கை!

இதற்கிடையில், ஃபிட்மென்ட் காரணி உயர்த்தப்பட்டால் 7வது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் அல்லது குறைந்தபட்ச ஊதியம் கணிசமாக உயரும். அந்த வகையில் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்துவதற்கு அரசாங்கம் விரைவில் ஒப்புதல் அளிக்கலாம் என்று பல ஊடக அறிக்கைகள் கூறியிருந்தன. அதே போல குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,000 ஆக உயர்த்தி ரூ.26,000 ஆகவும், ஃபிட்மென்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்துவது குறித்து அரசு அறிவிப்புகளை வெளியிட்டால், அவர்களின் சம்பளம் உயரும். உண்மையில், பொருத்துதல் காரணி அதிகரிப்புடன், குறைந்தபட்ச ஊதியமும் அதிகரிக்கும். பணியாளர்கள் தற்போது 2.57 சதவீதம் என்ற அடிப்படையில் ஃபிட்மென்ட் காரணியின் கீழ் சம்பளம் பெறுகின்றனர். இது 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.8,000 ஆக உயரும். அதாவது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயர்த்தப்படும்.

Exams Daily Mobile App Download

தற்போது, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 என்றால் அலவன்ஸ்கள் தவிர்த்து, 2.57 ஃபிட்மென்ட் காரணியின்படி ரூ.46,260 (18,000 X 2.57 = 46,260) கிடைக்கும். மேலும், ஃபிட்மென்ட் காரணி 3.68 ஆக இருந்தால், சம்பளம் ரூ. 95,680 (26000X3.68 = 95,680) ஆக இருக்கும். இதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவை ஜூன் 2017ல் 34 மாற்றங்களுடன் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்தது. இதில் தொடக்க நிலை அடிப்படை ஊதியத்திற்கு வழங்கப்படும் புதிய ஊதிய விகிதங்கள் மாதத்திற்கு ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆகவும், உயர்நிலையில் அதாவது செயலர் பதவிக்கு ரூ.90,000 லிருந்து ரூ.2.5 லட்சமாகவும் உயர்ந்தது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!