எந்த வேலையும் செய்யாமல் தூங்கினால் மட்டுமே ரூ.26,500 சம்பளம் – முந்தியடித்து விண்ணப்பித்த மக்கள்!
தூங்கும்போது மக்களின் உடலில் என்னென்ன செயல்பாடுகள் நடைபெறுகிறது மற்றும் தூங்கி எழுந்ததும் அவர்கள் எந்த அளவுக்கு புத்துணர்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்ய மலாயா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்பவர்களுக்கு ரூ.26,500 சம்பளம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தூங்கினால் சம்பளம்:
தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மக்கள் எந்த அளவுக்கு புத்துணர்ச்சியாக இருக்கிறார்கள் என்பதனை ஆய்வு செய்ய தற்போது மலாயா பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு ஒன்றை மேற்கொள்ள இருக்கிறது. இதனால் இந்த ஆய்வில் கலந்து கொள்வோருக்கு 1500 ரிங்கிட் அதாவது இந்திய ரூபாய் மதிப்பீட்டின்படி 26 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் எனவும் மலாயா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
சராசரி உடல் எடை கொண்ட, தூக்கம் தொடர்பான எந்த பிரச்சினையும் இல்லாத, 20 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களை வைத்து மலாயா பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொள்ள இருக்கின்றனர். ஒவ்வொரு மக்களும் தூங்கி எழுந்ததும் எவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கிறார்கள், உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதற்கான ஆய்வினை விரைவில் தொடங்க உள்ளனர். இந்த ஆய்வில் பங்கேற்ப்பவர்களுக்கு தூங்குவது மட்டுமே வேலை. தொடர்ந்து தூங்கி எழுந்தாலே போதும்.
ICAR-IASRI நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை – முழு விவரங்கள் இதோ..!
இந்த ஆய்வில் கலந்து கொள்வோரை மலாயா பல்கலைக்கழகம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். எந்த வேலையும் செய்யாமல் சும்மா தூங்குபவர்களுக்கு இவ்வளவு சம்பளம் வழங்குகிறார்களா என மக்கள் பலரும் முண்டியடித்துக் கொண்டு இந்த ஆய்வில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். மலாயா பல்கலைக்கழகம் இந்த பதிவினை வெளியிட்ட சில மணி நேரத்திலேயே பதிவு செய்வோரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகமானதால் மலாயா பல்கலைக்கழகம் உடனே அந்த பதிவை நிறுத்தி இருக்கிறது. மேலும் ஆய்வு தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற இருக்கிறது.