தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு – முதல்வரிடம் வைத்துள்ள முக்கிய கோரிக்கை!
தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் வாக்குறுதி அளித்துள்ள நிலையில் அதனை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது.
ஊதிய உயர்வு:
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு தமிழக அரசுப்பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட பாடங்களுக்கு சுமார் 16, 549 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
Follow our Instagram for more Latest Updates
இவர்களுக்கு மாதம் ரூ.10,000 தொகுப்பூதிய அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் வாக்குறுதி அளித்தபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
EPFO பயனர்களுக்கு 8.1% வட்டியை அளிக்க உள்ள ஆணையம் – முக்கிய தகவல் வெளியீடு!
Exams Daily Mobile App Download
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில் 12 ,000 ஆசிரியர்களின் குடும்பம் வாழ தமிழக முதல்வர் 300 கோடி ரூபாய் நிதியை கூடுதலாக ஒதுக்கி சம்பளத்தை உயர்த்த வேண்டும். மேலும் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதற்கான முடிவை விரைந்து எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.