EPFO பயனர்களுக்கு 8.1% வட்டியை அளிக்க உள்ள ஆணையம் – முக்கிய தகவல் வெளியீடு!
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள தொகைக்கு EPFO ஆணையம் ஆனது வழங்க உள்ள வட்டி விகிதம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
வட்டி விகிதம்:
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் மாதம் 12.5% தொகையை அளிக்க வேண்டும். இதேபோல், ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் சார்பில் அதே அளவிலான தொகை ஊழியர் கணக்கிற்கு அளிக்கப்பட வேண்டும். இந்த தொகைக்கு ஆண்டுதோறும் EPFO அமைப்பானது குறிப்பிட்ட அளவிற்கு வட்டி வழங்குகிறது. இந்த வட்டி தொகையானது நேரடியாக ஊழியர்களின் PF கணக்கில் செலுத்தப்பட்டு விடும்.
பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள் – விவசாயிகளின் கவனத்திற்கு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், 2022ம் நிதியாண்டிற்கான வைப்பு தொகைக்கு வட்டி விகிதம் அளிக்கப்படுவது குறித்து ஆலோசனை நடந்து வந்த நிலையில், 8.1% அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வட்டி தொகையானது நேரடியாக ஊழியர்களின் கணக்கில் விரைவில் செலுத்தப்பட உள்ளதாகவும், அவ்வாறு செலுத்தப்படும் பட்சத்தில், ரூ.1 லட்சம் கணக்கில் வைத்திருக்கும் நபருக்கு ரூ. 8,100 வட்டியும், ரூ.10 லட்சம் கணக்கில் வைத்திருக்கும் நபருக்கு ரூ.81,000 ம் வட்டியாக கிடைக்கும் என்றும் தெரிகிறது.