அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – மீண்டும் உயர்த்தப்பட உள்ள சம்பளம்!
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ஊழியர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு பல நலத்திட்டங்களை தொடர்ந்து அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது என்றால் மத்திய அரசு fitment factorஐ உயர்த்துவது ஆகும்.
தமிழகத்தில் இன்று (பிப். 6) லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மேலும் உயர வாய்ப்புள்ளது. Fitment Factorஐ 2.57இல் இருந்து 3.68ஆக உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகாள ஊழியர்கள் போராடி வருகின்றனர். தற்போது அது குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் ஊழியர்கள் நிம்மதி அடைந்து இருக்கின்றனர். இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 18000 ரூபாயில் இருந்து 26000 ரூபாயாக உயர வாய்ப்புள்ளது.
‘வாவா’ சுரேஷ் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் – மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு!
இது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 2.57 fitment factor அடிப்படையில் 18000 ரூபாய் அடிப்படை சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த அறிவிப்பால் itment factor 3.68ஆக உயர்த்தப்பட்டு அடிப்படை சம்பளம் 26000 ரூபாயாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அடிப்படை சம்பளமே 8000 ரூபாய் உயரும் அதனால் ஊழியர்கள் நிம்மதி அடைந்து இருக்கின்றனர்.