‘வாவா’ சுரேஷ் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் – மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு!
கேரளாவின் புகழ் பெற்ற பாம்பு பிடி வீரரான ‘வாவா’ சுரேஷின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் அவரது நலன் விரும்பிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
‘வாவா’ சுரேஷ்
அண்டை மாநிலமான கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தினை சேர்ந்தவர் தான், சுரேஷ். இவர் பல பாம்புகளை பயம் சிறிதும் இன்றி பிடித்து புகழ் பெற்றவர் என்று தான் கூற வேண்டும். இதன் காரணமாக இவருக்கு ‘வாவா’ சுரேஷ் என்றும் ‘பாம்புப்பிடி வீரர்’ சுரேஷ் என்றும் அடைமொழிகள் வழங்கப்பட்டு வந்தது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோட்டயம் அருகே உள்ள ஒரு வீட்டில் பாம்பு நுழைந்து விட்டது என்று பிடிக்க சென்று இருந்தார்.
இந்திய அணியில் இருந்து நான் விலக வேண்டுமா? ரோஹித் சர்மா காட்டம்!
ஆனால், அவர் பாம்பினை பிடிக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு அவரை கடித்து விட்டது. அவரை பல முறை பாம்புகள் கடித்திருந்தாலும் அவர் மீண்டு வந்து இருக்கிறார். ஆனால், இவரை கொடிய பாம்பு எதிர்பார்த்த நேரத்தில் கடித்ததால் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சுரேஷ் தற்போது நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
‘பாம்புப்பிடி’ மன்னன் வாவா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றமா? மருத்துவரின் விளக்கம்!
இதனை தொடர்ந்து இவர் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர் தீவிர சிகிச்சையின் போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததாகவும், அவர் மீண்டு வந்து விட்டார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஏற்கனவே, இவரை 300க்கும் அதிகமான பாம்புகள் கடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.