தமிழகத்தில் இன்று (பிப். 6) லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் வெயில் காலம் தொடங்கி இருக்கும் நிலையில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை வாய்ப்பு:
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வாவா’ சுரேஷ் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் – மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு!
இதனைத் தொடர்ந்து, நாளை (07.02.2022) முதல் 10.02.2022 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பாம்புப்பிடி’ மன்னன் வாவா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றமா? மருத்துவரின் விளக்கம்!
மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த லேசான மழையால் மக்கள் நிம்மதி அடைந்து இருக்கின்றனர். இன்னும் சில மாதங்களில் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்க இருப்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.