மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள அதிகரிப்பு – ஜூலையில் அகவிலைப்படி உயர்வு? முழு விவரம் இதோ!
அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வரும் ஜூலை மாதத்தில் மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
வரும் ஜூலை மாதத்தில் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகை அதிகரிக்க இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது. இப்போது, DA உயர்வு குறித்து வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு முடிவெடுக்கும் எனத் தெரிகிறது. அந்த வகையில் ஜூலை தவணைக்கான டிஏ தொகை மீண்டும் 3 சதவீதம் உயர்த்தப்படும் என்று ஊகிக்கப்படுகிறது. இப்போது, ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், கடந்த 18 மாதங்களாக நிலுவையில் உள்ள DA தொகைக்கான காத்திருப்பு முடிவுக்கு வரும்.
Exams Daily Mobile App Download
நாட்டில் நிலவும் சில்லறை பணவீக்க தரவுகளின் அடிப்படையில், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை DA தொகை திருத்தப்படுகிறது. இந்த தொகை பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் கூடுதல் கொடுப்பனவாகும். அரசின் இந்த நடவடிக்கையால் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள். இதுவரை மத்திய அரசு ஊழியர்கள் 34% என்ற வகையில் அகவிலைப்படி உயர்வை பெற்று வருகின்றனர். அதன்படி, அகவிலைப்படி (DA) பாக்கிகள் நிலை 1 பணியாளர்களுக்கு ரூ.11,880 முதல் 37,000 வரை இருக்கும்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இதை செய்யாவிட்டால் கார்டு ரத்து!
அதே போல லெவல் 13ல் உள்ள பணியாளர்கள் ரூ.1,44,200 முதல் 2,18,200 வரை டிஏ நிலுவைத் தொகையைப் பெறுவார்கள். இதற்கிடையில், கடந்த பிப்ரவரியில் 6.1 சதவீதமாக இருந்த பணவீக்கம் மார்ச் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் குறித்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. இப்போது, மீண்டுமாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகை 3% என அதிகரித்தால் மொத்த தொகை 37 சதவீதத்தை எட்டும். இதன் மூலம் ஊழியர்களின் சம்பளமும் கணிசமாக உயர்வடைய வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.