மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பள உயர்வு – நிதியமைச்சகம் ஆலோசனை!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பள உயர்வு - நிதியமைச்சகம் ஆலோசனை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பள உயர்வு - நிதியமைச்சகம் ஆலோசனை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பள உயர்வு – நிதியமைச்சகம் ஆலோசனை!

அரசு ஊழியர்களுக்கு கடந்த தீபாவளி பண்டிகை முன்னிட்டு அகவிலைப்படி 3% உயர்த்தி தற்போது 31% வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பள உயர்வு வழங்க மத்திய நிதியமைச்சகம் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புத்தாண்டு பரிசு:

நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை அகவிலைப்படி 28% வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு வழங்குமாறு அதாவது அகவிலைப்படி, வீட்டு வாடகை படி உள்ளிட்டவைகளை உயர்த்துமாறு அரசை வலியுறுத்தி வந்தனர்.

Post Office இல் சேமிக்க தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – சிறந்த 2 திட்டங்கள் இதோ!

அவர்களது வலியுறுத்தலை ஏற்று மத்திய அரசு கடந்த தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 3% உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இத்தகைய அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் தங்களது அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சம்பள உயர்வு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு – முதல்வர் அறிவிப்பு!

இவ்வாறாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி ஒரு மாத காலம் கூட முடிவடையாத நிலையில் மீண்டும் வரும் ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப் படியை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 11.56 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்துவது குறித்து நிதியமைச்சகமும் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே வரும் ஜனவரி 1ம் தேதி அன்று புத்தாண்டு பரிசாக வீட்டு வாடகைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமான அளவு அதிகரிக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!