இன்றிரவு முதல் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – கொரோனா பாதிப்புகள் எதிரொலி!
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நேர்மறை விகிதத்திற்கு மத்தியில் தினசரி இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்றும் அதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அறிவிப்பு
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலைப்பரவல் குறைந்திருக்க கூடிய சூழலில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் கொரோனா வழக்குகளின் நேர்மறை விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அதனால் ஜம்மு யூனியன் பிரதேசம் முழுவதுமாக இன்று (நவ.17) முதல் இரவு ஊரடங்கு உத்தரவு விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும், அதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பள உயர்வு – நிதியமைச்சகம் ஆலோசனை!
இந்த அறிவிப்பானது, நகரின் தொற்றுநோய் நிலைமை குறித்து ஆய்வு செய்த மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட மறுஆய்வுக் கூட்டத்திற்கு பின்பாக எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஜம்முவில் கொரோனா நேர்மறை விகிதம் சமீபத்தில் 0.2 சதவீதம் அதிகரித்துள்ளதால் ஊரடங்கு குறித்த நடவடிக்கைகள் தேவை என்று கருதிய அரசாங்கம் இந்த ஊரடங்கு முடிவை எடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜம்முவில் அதிகரித்து வரும் நேர்மறை விகிதத்தைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 17 முதல் தினசரி இரவு 10 முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுகிறது.
தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! நாளை நேர்காணல்!
இப்போது கொரோனா வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், முழுமையாக தடுப்பூசி போடவும், நகரத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் நிலையான நோய் தடுப்பு நடைமுறைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது ஜம்மு காஷ்மீரில் செயலில் உள்ள கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 1,517 ஆக உள்ளது. அதே நேரத்தில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 4,453 எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.