தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான ஊதியம் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஊதியத்தொகை:
நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி என்று நடைபெறும். இந்நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று வாக்கு பதிவு நடைபெற உள்ளது.
தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில் தேர்தலில் ஈடுபடும் ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் 58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது. குறிப்பாக வாக்கு சாவடி தலைமை அலுவலருக்கு ரூபாய் 1700 முதல் கடைநிலை ஊழியர்களுக்கு ரூபாய் 600 வரை ஊதியம் வழங்க அனுமதி அளித்துள்ளது.