தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் – நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (அக்.6) முதல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வாக்கு சேகரிக்கும் பணிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 தேதிகளிலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் சனிக்கிழமையும் (அக்.9) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் மொத்தம் 80,819 பேர் தேர்தல் காலத்தில் உள்ளனர். தீவிர பிரச்சாரம் நடந்து முடிந்த நிலையில் நாளை முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வு – அக்.6 முதல் தொடக்கம்!
9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 17,662 பதவிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை (அக்.6) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 முதல் 6 மணி வரை பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.