தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இலவச மாணவர் சேர்க்கை – 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்!
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு தனியார் பள்ளிகளில் 1,42,175 பேர் விண்ணப்பித்துள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தகவல் தெரிந்துள்ளது. மேலும் மே 30ம் தேதி குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
RTE இலவச சேர்க்கை
இந்தியாவில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அரசு 25 % இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் கல்வி அளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி பெற விரும்பும் குழந்தைகளின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இவர்கள் தேர்தெடுக்கும் பள்ளி 1 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் உள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் அறிவிப்பு – Ola S1 Pro ஸ்கூட்டர் இலவசம்!
இத்திட்டத்தில் தனியார் பள்ளிகளில் கற்கும் மாணவர்களின் கல்வி செலவு முழுவதையும் அரசே ஏற்கிறது. தற்போது 2022-2023 ம் கல்வியாண்டிற்கான கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் 20ம் தேதி தொடங்கியது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர்கள் www.rte.tn schools gov.in என்ற இணையதளம் வாயிலாக பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. முதலில் RTE மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் இணையதளத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கால அவகாசம் பிறகு மே 25 வரை நீட்டிக்கப்பட்டது. வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. நடப்பு ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர 1,42,175 பேர் பேர் விண்ணப்பித்துள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும் 1.10 லட்சம் இடத்துக்கு 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால் வரும் மே 30ம் தேதி குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.