தமிழகத்தில் பருவமழையால் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800 நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வெள்ள நிவாரணம்:
தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் முதல் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டுகளை போல இல்லாமல் இந்த ஆண்டு மழை தாக்கம் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் கடந்த 4 நாட்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறுகையில், கடந்த 4 நாட்களாக புரட்டி எடுத்த மழை தற்போது குறைந்து இருக்கிறது. ஆனால் அடுத்து 3 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் தற்போது பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800 நிவாரணம் வழங்கப்படும் எனவும், மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தீவிர கனமழை – பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை?
Exams Daily Mobile App Download
மேலும் வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் தற்போது வரை 35 பேர் உயிரிழந்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் மழை காரணமாக ஏகப்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளது. அதனால் இறந்த பசுக்களுக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.