தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தீவிர கனமழை – பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
கனமழை:
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி மக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், நீலகிரி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த தொடர் மழையால் இன்று (14.11.2022) மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக மழை பொழிவு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து வரும் 16ம் தேதி அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இது புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மீண்டும் லிங்க் விரைவு ரயில் சேவைகள் தொடக்கம்? வலுக்கும் கோரிக்கை!!
Exams Daily Mobile App Download
இதனையடுத்து தமிழகத்தில் வரும் நவ.16ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு சிவப்பு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பள்ளிகளுக்கு மழையால் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.