RRB Group D தேர்வு முடிவுகள் 2022 – வெளியான முக்கிய தகவல்!
இந்திய ரயில்வே வாரியத்தின் குரூப் D தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தேர்வு முடிவுகள்:
இந்தியாவில் பொது துறைகளில் ஒன்றான ரயில்வே தனது துறையின் கீழ் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் உதவியாளர், ட்ராக் மெயின்டெய்னர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான RRB குரூப் D தேர்வு குறித்த அறிவிப்பு 2019-இல் வெளியிடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கால தாமதம் ஆகி தேர்வுகள் இந்த ஆண்டு தான் நடத்தப்பட்டது. இந்த வேலைவாய்ப்பின் கீழ் 1,03,769 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
சுமார் 1,15,67,248 பேர் RRB குரூப் D தேர்வை எழுத விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது. பிறகு அறிவித்தபடி குரூப் D யின் முதல் கட்ட தேர்வு ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கியது. கணினி முறையில் இத்தேர்வினை இந்தியா முழுவதும் ஏராளமானோர் எழுதினர். இந்த தேர்வு பல்வேறு கட்டங்களாக அக்டோபர் 11ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது தேர்வர்கள் தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் டிசம்பர் மாதத்தின் முதல் 2 வாரங்களுக்குள் முடிவுகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Exams Daily Mobile App Download
தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வது எப்படி?
- முதலில் RRB-இன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
- அதில் குரூப் D தேர்வு முடிவுகள் லிங்கை கிளிக் செய்யவும்
- இப்பொழுது தேவையான உள்ளீடுகளை நிரப்பி, summit செய்யவும்
- உங்கள் தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்