TNPSC DCPO, Assistant Director & Psychologist தேர்வுகளின் இறுதி முடிவுகள் வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு!!
TNPSC தேர்வாணையம் தற்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, உதவி இயக்குநர், சிறைதுறை உளவியலாளர் போன்ற பணிக்காக நடந்து முடிந்த தேர்வுகளின் இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இறுதி முடிவுகள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடப்பு ஆண்டில் அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமனங்களை தீவிரமாக செய்து வருகிறது. இதேபோல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, உதவி இயக்குநர், சிறை மற்றும் சீர்த்திருத்த உளவியலாளர் போன்ற பணிகளுக்கான காலியிட அறிவிப்புகள் தனித்தனியாக வெளியிடப்பட்டது.
அதன்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு மொத்தம் 16 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்கள் 31.10.2022 அன்று நடந்த வாய்மொழித்தேர்வு மற்றும் 14.11.2022 நடத்த கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர். அடுத்ததாக, உதவி இயக்குநர் பணிக்கு 11 காலியிடங்களுக்கான கணினி அடிப்படையிலான எழுத்து தேர்வு நவம்பர் 5ம் தேதி நடத்தப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து, சிறை மற்றும் சீர்த்திருத்த உளவியலாளர் பணிக்கு 4 காலியிடங்களும், ஆகஸ்ட் 6ம் தேதி காலை மற்றும் பிற்பகல் என 2 தாள்களுக்கான தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த 3 தேர்வுகளுக்குமான இறுதி முடிவுகளை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
SBI PO Prelims நுழைவு சீட்டு 2022 – Hall Ticket பதிவிறக்கம் செய்வது எப்படி?
Exams Daily Mobile App Download
தேர்வு முடிவு பதிவிறக்கம் செய்யும் முறைகள்:
- முதலில் TNPSC ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில், தேர்வு முடிவுகள் என்ற பகுதியில், நீங்கள் எழுதிய தேர்வினை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
- இப்பொழுது, உங்களது விவரங்களை உள்ளிட்டு தேர்வின் முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.
- இப்பொழுது நீங்கள் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.