தமிழகத்தில் காவலர்களுக்கு சுழற்சி முறை விடுப்பு – டிஜிபி உத்தரவு!!
தமிழகத்தில் காவலர்களுக்கு வழங்கப்பட்ட சுழற்சி முறை விடுப்பை 20 சதவீதமாக அதிகரிக்க காவல் ஆணையர்களுக்கு காவல்துறை அதிகாரி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
சுழற்சி முறை விடுப்பு :
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவ தொடங்கியது முதல் அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொள்கிறது. இதில் காவல்துறையினரின் பங்கு இன்றியமையாததாகும். தடுப்பு நடவடிக்கையாக அரசு ஊரடங்கை அமலில் வைத்துள்ளது. அதனால் காவல் துறையினர் சாலைகளில் நின்று கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதிகாரிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காவலர்கள் இந்த கொரோனா தடுப்பு பணியில் பணியில் முன்கள பணியாளர்களாக செயல்படுகின்றனர்.
ஜூன் 8 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!!
அதனால் காவல்துறையினர் இந்த பெருந்தொற்று காலத்திலும் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர். இதுவரை தமிழக காவல் துறையில் 84 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் அதிகம் உழைப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தங்கள் உடல் நிலையை கவனித்து கொள்ளாமல் பணி செய்கின்றனர். எனவே அவர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு வழங்கும் படி கோரிக்கைகள் எழுந்தன. இதை ஏற்று அரசு 10 % பேருக்கு சுழற்சி முறையில் விடுப்பு வழங்கியது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து தற்போது காவல் துறையினருக்கான விடுப்பு மேலும் 10% அதிகரிக்கப்பட்டு 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் இந்த இக்கட்டான காலத்தில் அயராது உழைக்கின்றனர். ஏராளமானோர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே காவலர்களை காக்க அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்பட்ட விடுப்பை 20 சதவீதமாக அதிகரிக்க காவல் ஆணையர்களுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.