தமிழகத்தில் இன்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு – மீறினால் கடும் நடவடிக்கை!!

0
தமிழகத்தில் இன்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு - மீறினால் கடும் நடவடிக்கை!!
தமிழகத்தில் இன்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு - மீறினால் கடும் நடவடிக்கை!!
தமிழகத்தில் இன்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு – மீறினால் கடும் நடவடிக்கை!!

கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் தமிழகத்தில் இன்று (மே 24) முதல் ஒரு வாரங்களுக்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அவசியம் இன்றி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மே 10 ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த பொது முடக்க காலத்தில் மருந்துகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலும் தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் உயர்ந்து வந்தது. இதன் காராணமாக மாநிலம் முழுவதும் எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என எழுந்து வந்த பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், இன்று (மே 24) முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த ஊரடங்கு காலத்தில் அவசியமில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் ஊடகம், பத்திரிகை துறை, பால் வினியோகம் போன்ற ஒரு சிலசேவைகளுக்கு மட்டுமே தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை இல்லாமல் சாலைகளில் தேவையின்றி சுற்றித்திரிபவர்களை கண்காணிக்க சென்னையில் 153 இடங்களில் போக்குவரத்து காவல்துறை தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.

தமிழகத்தில் காவலர்களுக்கு சுழற்சி முறை விடுப்பு – டிஜிபி உத்தரவு!!

மேலும் சட்டம் ஒழுங்கு போலீசாரும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். தவிர டிரோன் கேமரா மூலமாகவும், சாலைகள், தெருக்களில் நடமாடும் மக்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுப்பாடுகளை மீறி வெளியே வருபவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். தடையை மீறி கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்களின் கடைக்கு சீல் வைக்கப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் அரசுக்கும், காவல்துறைக்கும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!