ஜூன் 8 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!!
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 8 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் சற்றே குறைந்து வருகிறது. ஆனால் சில மாநிலங்களில் மட்டும் கொரோனா தாக்கம் தற்போது தான் வேகமெடுத்துள்ளது. மேலும் தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (மே 24) வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் இன்று முதல் வீதிகளில் காய்கறிகள் விற்பனை – அரசு ஏற்பாடு!!
இந்த ஊரடங்கை ஜூன் 8 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,521 பேருக்கு புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 113 பேர் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக இன்றுடன் முடியும் முழு ஊரடங்கு உத்தரவை, நாளை (மே 25) காலை 5 மணி முதல் ஜூன் 8 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை மும்மடங்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து இந்த முடக்கத்தின் போது வெளி மாநிலங்களில் இருந்து ராஜஸ்தானுக்கு வரும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சான்றிதழ் இல்லாதவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.