“பாரதி கண்ணம்மா” சீரியலுக்கு மீண்டும் வந்த ரோஷினி? வெண்பா பரீனா கொடுத்த விளக்கம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி உடன் எடுத்த புகைப்படத்தை வெண்பா வெளியிட்ட நிலையில், கண்ணம்மா ரீ-என்ட்ரி கொடுத்திருக்காங்களா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் TRPயில் முன்னிலையில் இருக்கிறது. இந்த சீரியலில் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களிடம் பிரபலமாக உள்ளனர். மேலும் இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரின் வாழ்க்கையை சுற்றியே கதை அமைந்துள்ளது. கண்ணம்மாவும், பாரதியும் காதலித்து திருமணம் செய்து கொள்ள, பாரதியை ஒருதலையாக காதலிக்கும் வெண்பாவிற்கு அது பிடிக்கவில்லை. அதனால் இருவரையும் பிரிக்க திட்டமிட்டு பிரித்து விடுகிறார். கர்ப்பிணியாக இருந்த கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறி பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்.
‘முதன் முறையாக என்னை நான் உணர்ந்து கொண்ட தருணம் ‘ – மனம் திறந்த ‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினி!
கண்ணம்மா கதாபாத்திரத்தில் முதலில் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் நடித்து வந்தார். இருவரும் நல்ல ஜோடியாக சின்னத்திரையில் வலம் வந்த நிலையில், திடீரென ரோஷினி விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதில் தற்போது வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வருகிறார். இந்நிலையில் பழைய கண்ணம்மா ரோஷினி உடன் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் ரோஷினி மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து உள்ளாரா என கேள்வி எழுப்பினார்கள்.
பறிபோன சீரியல் வாய்ப்பு, போராடி வென்ற “கண்ணான கண்ணே” நிமிஷிகா – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ஆனால் அது பழைய புகைப்படம் எனவும், தற்போது வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரீனா குழந்தை பிறந்து ஓய்வில் இருக்கார் என தகவல் வெளிவந்துள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி விலகியதில் இருந்து TRPயில் சரிவு ஏற்பட்டது. அதை சரி செய்ய கதையில் பல திருப்பங்களை கொண்டு வந்து விறுவிறுப்பை அதிகப்படுத்தி உள்ளனர். மேலும் கண்ணம்மா வீட்டில் பாரதி நடந்து கொள்வது அனைத்துமே நகைச்சுவையாக இருக்கிறது. தொடர்ந்து அழுகை காட்சிகளாக இருந்த சீரியல் தற்போது தான் சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.