விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ரோஷினி ஹரிப்ரியன்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி விலகிய பிற்பாடு வலைதளத்தில் அவர் வெளியிடும் ஒவ்வொரு பதிவிலும் அவரை மிஸ் செய்து வருவதாக குறிப்பிடும் ரசிகர்கள் அவரை மீண்டுமாக இந்த சீரியலில் எதிர்பார்த்து வருகின்றனர்.
நடிகை ரோஷினி
கடந்த சில எபிசோடுகளாக பல்வேறு புதிய திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சில ஸ்வாரசியமான காட்சிகளுடன் நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் பல மாதங்களாக பிரிந்தே வாழ்ந்து வந்த பாரதி, கண்ணம்மா ஜோடி மீண்டுமாக ஒன்றாக இணைந்துள்ளது. இருந்தாலும் அவ்வப்போது சண்டையிட்டு வரும் இவர்கள் இருவரும், தங்களது கடந்த கால நினைவுகளை நினைத்து பார்க்கும் சில காட்சிகள் ரசிகர்களின் ரசனைக்குரிய ஒன்றாக மாறி இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – புத்தாண்டில் DA, HRA உயர்வு? முழு விவரம் இதோ!
இப்போது இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய கண்ணம்மாவாக நடிகை வினுஷா என்பவர் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை ரோஷினியின் ‘பாரதி கண்ணம்மா’ விலகலுக்கு பிறகு கண்டிப்பாக இந்த சீரியலின் TRP ரேட்டிங் அடிபடும் என கணிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது இந்த சீரியலில் ஒளிபரப்பாகும் சில ரொமான்டிக் காட்சிகள் அதிகபட்ச பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை அதன் டாப் இடத்திலேயே தக்கவைத்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள், 144 தடை அமல் – வழிகாட்டுதல்கள் வெளியீடு!
அதுவும் நடிகை ரோஷினி விலகிய பின்னர் தான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் மக்கள் எதிர்பார்த்தபடி ஒளிபரப்பாகி வரும் நிலையில் பலரும் இந்த சீரியலை மீண்டுமாக ரசிக்க துவங்கியுள்ளனர். அதே போல கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் புதுமுக நடிகை வினுஷாவும் மக்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறார். இருந்தாலும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நடிகை ரோஷினியை மிஸ் செய்து வரும் ரசிகர்கள், இந்த காட்சிகளில் கண்ணம்மாவாக நடிகை ரோஷினி நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என வருத்தம் தெரிவிப்பதுடன், மீண்டுமாக அவரின் வருகையை எதிர்பார்த்துள்ளனர்.