மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – புத்தாண்டில் DA, HRA உயர்வு? முழு விவரம் இதோ!
மத்திய அரசின் குறிப்பிட்ட துறை ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி மற்றும் டிஏவை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றினால் புத்தாண்டு முதல் சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தீபாவளி பரிசாக DA அதிகரிக்கப்பட்ட நிலையில், புத்தாண்டு பரிசாக DA, HRA உயர்த்தப்படும் என கூறப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு:
தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு இப்போது 31% DA உயர்வு கிடைக்கிறது. இந்நிலையில் 2022 ஜனவரியில் HRA அதிகரிப்புடன் மத்திய அரசு மற்றொரு DA உயர்வையும் வழங்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் HRA (வீட்டு வாடகைப்படி) உயர்வு ரயில்வே வாரியத்தின் 11.56 லட்சம் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படலாம். இந்த திட்டத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தால், ரயில்வே வாரிய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரியில் HRA அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அடுத்த 2 நாட்களுக்கு புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள், 144 தடை அமல் – வழிகாட்டுதல்கள் வெளியீடு!
ஊழியர்களின் HRA அவர்கள் வசிக்கும் நகரத்தை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் நகரங்கள் மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன – X வகை, Y வகை மற்றும் Z வகை. விதிமுறைகளின்படி, 50 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ‘எக்ஸ்’ பிரிவின் கீழ் வருகின்றன. மேலும் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் ‘ஒய்’ பிரிவின் கீழும், 5 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் ‘இசட்’ பிரிவின் கீழும் வருகின்றன.
தமிழகத்தில் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை? விரைவில் முக்கிய அறிவிப்பு!
இருப்பினும், எக்ஸ், ஒய் மற்றும் இசட் ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச எச்ஆர்ஏ முறையே ரூ.5400, 3600 மற்றும் ரூ.1800 என எதிர்பார்க்கப்படுகிறது. செலவினத் துறையின் தகவல்களின் படி, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டினால், அதிகபட்ச வீட்டு வாடகை கொடுப்பனவு 30 சதவீதமாக உயரும் மற்றும் அதற்கேற்ப அவர்களின் சம்பளம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.