அடுத்த 2 நாட்களுக்கு புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள், 144 தடை அமல் – வழிகாட்டுதல்கள் வெளியீடு!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது நிலவி வரம் ஒமிக்ரான் மாறுபாடு பரவல் காரணமாக மும்பை மாநகரில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஊரடங்கு தொடர்புடைய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டுதல்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள்
இந்தியாவில் கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரான் பரவல் காரணமாக பல நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மாநகரத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அடுத்த 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை? விரைவில் முக்கிய அறிவிப்பு!
அந்த வகையில் மஹாராஷ்டிராவின் மும்பை மாநகரத்தில் மட்டும் இதுவரை 17 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது. அதாவது மாநிலம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸின் புதிய தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மும்பை மாநகரத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மக்கள் மற்றும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கு தடை விதித்து மும்பை மாநகர கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளை (டிச.11) ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!
இந்த கட்டுப்பாடுகள் ஆனது டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்களில் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மும்பை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட முழுமையான வழிகாட்டுதல்களின் படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 144 மும்பை கமிஷனர் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் பெரிய கூட்டங்கள், பேரணிகள் மற்றும் எதிர்ப்பு ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதை மீறினால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188 மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் தண்டனை விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்