தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது இந்த தேர்வுகள் வரும் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு!
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி முதல் வாரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு அடிப்படையில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த பள்ளி கல்லூரி விடுமுறை காரணமாக மாணவர்கள் நேரடி கற்றல் முறை பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
IND vs WI: மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய 3 இளம் வீரர்கள் – ரசிகர்கள் உற்சாகம்!
அண்மையில் முதல்வர் அவர்கள் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து விட்டதாகவும், அதனால் ஊரடங்கில் தளர்வு அளித்தும் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு அடிப்படையில் பிப்ரவரி 1 முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளதால், தேர்தல் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் தேர்தல் பணிக்கு அரசு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முக்கிய எச்சரிக்கை! மார்ச் 31 கடைசி நாள்!
மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 10ம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு அடிப்படையில் மாணவர்களும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இருப்பினும் தற்போது பிப்.10 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதனால் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் நடைபெற இருக்கும் திருப்புதல் தேர்வு வரும் 17ஆம் தேதிக்கு மாற்றம் செய்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.