IND vs WI: மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய 3 இளம் வீரர்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

0
IND vs WI: மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய 3 இளம் வீரர்கள் - ரசிகர்கள் உற்சாகம்!
IND vs WI: மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய 3 இளம் வீரர்கள் - ரசிகர்கள் உற்சாகம்!
IND vs WI: மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய 3 இளம் வீரர்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

இந்தியா, வெஸ்ட் இண்டிஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், நவ்தீப் சைனி ஆகியோர் இணைந்துள்ளனர்.

ரசிகர்கள் உற்சாகம்:

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் பிப்ரவரி 6 ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் களம் இறங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து அபார வெற்றியைப் பெற்றது. இது இந்திய அணிக்கு ஆயிரமாவது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து 2 மற்றும் 3 வது ஒருநாள் போட்டிகள் 9,11 ஆகிய தேதிகளிலும், டி20 தொடர் பிப்ரவரி 16,18,20 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முக்கிய எச்சரிக்கை! மார்ச் 31 கடைசி நாள்!

கடந்த ஆண்டு போலார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20 போட்டிகளில் விளையாடி 2 யில் தோல்வியடைந்து தொடரை நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், நவ்தீப் சைனி ஆகியோர் இணைந்துள்ளனர். ராகுல் முதல் போட்டிக்கு முன், தங்கையின் திருமணத்திற்கு சென்றிருந்தார். தற்போது அவர் அணியில் இணைந்துள்ளார். ஷிகர் தவன், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கொரோனா உறுதியானதால், மயங்க் அகர்வால் ஓபனராக சேர்க்கப்பட்டிருந்தார்.

IPL 2022 திருவிழா ஆரம்பம் – பிப்.12 இல் தொடங்கும் வீரர்கள் ஏலம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இதனை தொடர்ந்து அகர்வாலுக்கு நேற்றுடன் குவாரண்டைன் காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இதை அடுத்து நவ்தீப் சைனி பேக்கப் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். 2 வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் / கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் / கே.எல்.ராகுல், தீபக் ஹூடா, ஷர்தூல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், யுஜ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!