தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் திருத்தம்!

0
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் திருத்தம்!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் திருத்தம்!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் திருத்தம்!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்ட திருப்புதல் கடந்த 17ம் தேதி அன்று நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் இத்தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி விரைவில் மதிப்பெண் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்புதல் தேர்வு மதிப்பீடு

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்ததால் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. ஆனால் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் அப்போது நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் தொற்று பரவல் குறைய தொடங்கியதால் அமலில் இருந்த கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் மூடல் – பெற்றோர்கள் கோரிக்கை!

அதன்படி கடந்த 1ம் தேதி அன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்க அரசு அனுமதி அளித்தது. அத்துடன் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி வகுப்புகளை நடத்தி வந்தனர். மேலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் திருப்புதல் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்ட திருப்புதல் தேர்வு கடந்த பிப்ரவரி 9ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வு பொது தேர்வு நடத்தப்படுவது போல நடைபெற்றது.

இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி? அரசுக்கு கோரிக்கை!

ஆனால் முதல் திருப்புதல் தேர்வு நடைபெறுவதற்கு முன்பு ஏராளமான மாணவர்களுக்கு வினாத்தாள் கிடைத்துள்ளது. மேலும் இந்த தேர்வை மாணவர்கள் விடைகளை தெரிந்து கொண்டு எழுதினார்கள். அதனால் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படுமா என்று சந்தேகம் இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று விடைத்தாள்கள் திருத்தம் செய்யும் பணிகள் தொடங்கியது. இந்த வினாத்தாள் அரசு தேர்வு துறை வழங்கிய விடைக்குறிப்பு அடிப்படையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்கள் ஆசியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் இத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் ஒரு வாரத்துக்குள் வெளியாக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!