இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி? அரசுக்கு கோரிக்கை!
டெல்லியில் கனாட் பிளேஸ் சந்தையை பிரதிநிதித்துவப்படுத்தும் புது டெல்லி வர்த்தகர்கள் சங்கம், தினசரி இரவு 10 மணி வரை கடைகள் மற்றும் சந்தைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி அரசாங்கத்தை வலியுறுத்தி இருக்கிறது.
கடைகள் திறப்பு
கொரோனா 3ம் அலை தொற்று நிமித்தம் தேசிய தலைநகர் டெல்லியில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் பலவும் தளர்த்தப்பட்டு மக்கள் இப்போது தான் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். அந்த வகையில் டெல்லியில் வார இறுதி ஊரடங்கு கட்டுபாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு உணவகங்கள், பார்கள் மற்றும் சினிமாக்களில் 50 சதவீத திறனுடன் செயல்பட்டு வருகிறது. அதே போல பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது.
கோவையை தட்டி தூக்கிய திமுக, முடிவு வெளியான அனைத்து இடங்களிலும் வெற்றி – தொண்டர்கள் உற்சாகம்!
இந்த நிலையில் உள்ளூர் வணிகங்கள் மீதான தொடர்ச்சியான கட்டுப்பாடுகளின் தாக்கம் குறித்து கவலை தெரிவித்த வர்த்தகர்கள் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி கோரி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த வகையில் கனாட் பிளேஸ் சந்தையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புது தில்லி வர்த்தகர்கள் சங்கம், இரவு 10 மணி வரை கடைகள் மற்றும் சந்தைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி அரசாங்கத்தை வலியுறுத்தி கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் சூப்பர் அறிவிப்பு!
இது குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில், ‘உத்திர பிரதேசம் மற்றும் ஹரியானாவில் இரவு ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் டெல்லியில், கடையை மூடும் நேரம் இரவு 8 மணிக்கே இருப்பதால் கடை உரிமையாளர்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் கொரோனா பாசிட்டிவிட்டி விகிதம் வெகுவாக குறைந்து வருவதால், உணவகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மூடும் நேரத்தை போலவே கடைகளை மூடும் நேரத்தையும் அரசாங்கம் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.