மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் சூப்பர் அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சலுகைகளான, அகவிலைப்படி உயர்வு, வீட்டு வாடகைப்படி உயர்வு, சம்பள உயர்வு ஆகிய சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு அடுத்தகட்ட அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து தொழில்துறைகளும் முடக்கப்பட்டது. இதனால் அதிகமான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இந்த வகையில் பல்வேறு தடுப்பு விதிமுறைகள் அடிப்படையில், ஊரடங்குகளில் தளர்வு அளிக்கப்பட்டு சீரான நிலைக்கு அனைத்து மாநிலங்களும் திரும்பி வருகிறது. இருப்பினும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்தகட்ட அகவிலைப்படி உயர்வு விரைவில் வெளியாகும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் நாளை (பிப்.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையில் வருடம் தோறும் ஜனவரி, ஜூன் ஆகிய மாதங்களில் அகவிலைப்படி உயர்வு பற்றிய தகவல் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தீபாவளி பண்டிகைக்கு முன்பு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியானது. தற்போது ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஏற்கனவே வரவேண்டிய அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையும் ஒரே கட்டமாக செலுத்த உள்ளதாக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வந்துள்ளது.
இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 3% அளித்தால், அகவிலைப்படி 34% ஆக உயரும் என்று அரசு ஊழியர்கள் சார்பில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக விலைவாசி அதிகரித்து வருவதால்,அரசு ஊழியர்கள் சார்பில் அகவிலைப்படி உயர்வுக்கான கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்த வகையில் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் நுகர்வோர் விலை பணவீக்கம் 5.66% உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.