கோவையை தட்டி தூக்கிய திமுக, முடிவு வெளியான அனைத்து இடங்களிலும் வெற்றி – தொண்டர்கள் உற்சாகம்!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கையின் படி கோவையில் திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
திமுக வெற்றி:
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் கடந்த 19 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தல் வாக்குபதிவின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி அநேக இடங்களில் திமுக முன்னிலையில் இருக்கிறது.
ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய செயலி அறிமுகம்!
கோவை மாநகராட்சியில் முடிவு வெளியான அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. அதில் 778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 15 லட்சத்து 65 ஆயிரத்து 158 வாக்காளர்களில், 8 லட்சத்து 39 ஆயிரத்து 109 பேர் வாக்களித்து இருக்கின்றனர். கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்று வருகிறது. அங்கே 2,500 போலீஸாரும், மற்ற 17 இடங்களில் 2,000 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
- அதன் படி திமுக பல இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
- கோவை மாநகராட்சி 7வது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜ் வெற்றிபெற்றார்.
- கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் முடிவுகள் வெளியான 8 இடங்களில் 6 இடங்களில் திமுக, காங்கிரஸ் 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
- கோவை 4, 7, 31, 37, 62, 76வது வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 5, 71வது வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
- கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 5வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன் வெற்றி பெற்றுள்ளார்.
- கோவை மாநகராட்சி 71வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் அழகு ஜெயபால் வெற்றிபெற்றுள்ளார்.
- கோவை மாநகராட்சி 7வது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜ் வெற்றிபெற்றுள்ளார்.
- கோவை மாநகராட்சி 76வது வார்டில் திமுக வேட்பாளர் பி.ராஜ்குமார் வெற்றிபெற்றார். வெற்றி சான்றிதல் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.