ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய செயலி அறிமுகம்!
இந்தியாவில் ரயில் பயணிகள் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTC புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி மூலமாக நீங்கள் சில நிமிடங்களில் உங்கள் டிக்கெட்டை உறுதி செய்து கொள்ளலாம்.
டிக்கெட் முன்பதிவு:
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ரயில்கள் முழுவதுமாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்பதிவு அடிப்படையில் பயணிகள் பயணம் செய்ய ரயில்வே துறை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது ஆன்லைன் வாயிலாக ஐஆர்சிடிசி கணக்கு தொடங்கி அதன் மூலம் எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் சூப்பர் அறிவிப்பு!
இந்த இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதால் பயணிகள் சில சிக்கலை எதிர்கொள்கின்றனர். சில நேரங்களில் டிக்கெட் பதிவு உறுதி செய்யப்படுவதில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் IRCTC ரயில் டிக்கெட் செய்வதற்கு (கன்ஃபர்ம் தட்கல்) என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி மூலம் நீங்கள் சில நிமிடங்களிலேயே உங்கள் டிக்கெட்டை உறுதி செய்து கொள்ளலாம். மேலும் IRCTC ஆப் மூலமாக தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்யலாம்.
திருப்பதியில் தரிசன சேவைக்கட்டணம் உயர்வு – தேவஸ்தான முடிவால் பக்தர்கள் அதிர்ச்சி!
இந்த ஆப் மூலம் பயணிகள் நாளை மற்றும் நாளை மறுநாள் தட்கல் ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்கும் இருக்கைகளின் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். IRCTC பக்கத்தில் உள்ள my profile என்பதை கிளிக் செய்யவும் அதில் பயணிகளின் தகவல்கள் ஒரே கிளிக்கில் கிடைக்கும். டிக்கெட் முன்பதிவு செய்யும் போது உங்களது உங்கள் இணையதளத்தின் வேகம் அதிகமாக இருக்க வேண்டியது அவசியம். UPI Wallet அல்லது நெட் பேங்கிங் பயன்படுத்தி பணம் செலுத்த வேண்டும்.