தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் மூடல் – பெற்றோர்கள் கோரிக்கை!

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் மூடல் - பெற்றோர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் மூடல் - பெற்றோர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் மூடல் – பெற்றோர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், பெற்றோர்கள் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

மீண்டும் பள்ளிகள் மூடல்:

தமிழகத்தில் கொரோனா 3 வது அலை தாக்கம் குறைந்து வருவதால் பிப்ரவரி 1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது, இருப்பினும் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் கடந்த ஆண்டு கொரோனா எழுச்சி காரணமாக பொது தேர்வுகள் நடத்தப்படாமல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இருப்பினும் நடப்பு ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வுகள் நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.

இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி? அரசுக்கு கோரிக்கை!

இந்த அறிவிப்பு அடிப்படையில் பொதுதேர்வு எழுதுவோர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் புதிய கோரிக்கை ஒன்று வைக்கபட்டு உள்ளது. அந்த கோரிக்கையில் நடப்பு கல்வி ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில்,ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கோடை விடுமுறை வருகிறது. கொரோனா காலக் கட்டம் காரணமாக, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுவது சந்தேகம் என்பதால் தேர்வு நடைபெறுவதற்கான வாய்ப்பும் குறைவு என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

கோவையை தட்டி தூக்கிய திமுக, முடிவு வெளியான அனைத்து இடங்களிலும் வெற்றி – தொண்டர்கள் உற்சாகம்!

இந்நிலையில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் இல்லாமல் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளனர். மேலும் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும். அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை புத்துணர்ச்சியுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இந்த கோரிக்கை குறித்து விரைவில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!