தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திருப்புதல் தேர்வு அட்டவணை!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.
திருப்புதல் தேர்வு:
தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் அலை என மக்கள் அனைவரையும் அதிக பீதியில் ஆழ்த்தியது கொரோனா தொற்று. இந்த கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 18 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவ, மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பின்பு சில தேர்வுகளும் ரத்து செய்யபட்டது. இதையடுத்து தமிழக அரசின் பல்வேறு முயற்சியின் பயனாக கொரோனா தொற்று குறைந்து வந்தது. கொரோனா தடுப்பு விதிமுறைகளும் பொதுமக்களால் பின்பற்றப்பட்டு வந்தது.
மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் – ரசிகர்கள் பாராட்டு மழை!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததால் செப்டம்பர் 1ம் தேதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்பு நவம்பர் 1ம் தேதி நடுநிலை பள்ளிகளும் திறக்கப்பட்டு சிறப்பான முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் திருப்புதல் தேர்வு குறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – கைரேகை கட்டாயமில்லை! அமைச்சர் அறிவிப்பு!
இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வு ஜனவரி 19ல் தொடங்க உள்ளதாகவும் மற்றும் 2ம் திருப்புதல் தேர்வு மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த திருப்புதல் தேர்வு மூலம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வுக்கு சிறப்பாக தயார் ஆவதற்கு உதவியாக இருக்கும். இருப்பினும் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டதால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த திருப்புதல் தேர்வின் விரிவான தேர்வு கால அட்டவணையை பள்ளி ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை திருப்புதல் தேர்வுக்கு மாணவர்களை சிறப்பாக தயார்படுத்தவும், திருப்புதல் தேர்வில் பெறும் மதிப்பெண்களை பதிவு செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.