தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – கைரேகை கட்டாயமில்லை! அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 - கைரேகை கட்டாயமில்லை! அமைச்சர் அறிவிப்பு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 - கைரேகை கட்டாயமில்லை! அமைச்சர் அறிவிப்பு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – கைரேகை கட்டாயமில்லை! அமைச்சர் அறிவிப்பு!

தமிழக ரேஷன் கடைகளில் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத்தொகை வாங்க கைரேகை கட்டாயம் இல்லை என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு:

தமிழகத்தில் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு பொங்கல் பரிசுத்தொகுப்பை அறிவித்துள்ளது. இதில் பொங்கல் வைக்க தேவையான பொருட்களை தவிர மளிகை பொருட்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய பொருட்கள் மற்றும் ஒரு குடும்ப அட்டைக்கு முழு கரும்பும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மீண்டும் ஊரடங்கு? தமிழகத்தில் வேகமெடுக்கும் ஓமைக்ரான் ! அரசின் முடிவு என்ன?

சுமார் 2 ,15,48,060 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளதால் பரிசுத் தொகுப்பில் வைக்கப்படும் பொருட்களை பேக்கிங் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆட்சியில் அதிமுக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக 2500 ரூபாய் வழங்கப்பட்டது.

ஜனவரி 3ம் தேதி 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – முதல்வர் உத்தரவு!

ஆனால் திமுக அறிவித்துள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரொக்கப்பணம் குறித்த எந்த அறிவிப்புகள் இடம் பெறவில்லை. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் ஏமாற்றம் அடைத்துள்ளனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர் பொங்கல் பரிசுப் பொருட்களைப் பெற ரேஷன் அட்டைதாரரின் கைரேகை கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன் அட்டையை காண்பித்தாலே போதும் பொருட்கள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!