தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு? முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக மாற்ற வேண்டும் என்று மாவட்ட ஓய்வூதிய சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயது:
தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுப் பணிகளில் பெரும்பாலானோர் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு அரசுப் பணிகளில் உள்ளவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி, ஓய்வூதியம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மேலே குறிப்பிட்டவைகளில் ஓய்வூதியம் என்பது பணி ஓய்வு பெற்றபின் வழங்கப்படுகிறது. இத்தகைய பணி ஓய்விற்கு ஒரு குறிப்பிட்ட வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஹாப்பி நியூஸ் – டிச.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
அந்த வகையில் இதுவரை பணி ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தினால் பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது அதிகரிக்கப்பட்டது. அதாவது தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. ஏனென்றால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அவர்களுக்கு செட்டில்மென்ட் தொகை வழங்கும் அளவிற்கு போதிய நிதி இல்லாதமை ஒரு காரணமாக கூறப்பட்டது.
ஓமைக்ரான் தொற்றால் IND vs SA கிரிக்கெட் தொடர் நடைபெறுமா? தென் ஆப்பிரிக்க வாரியம் விளக்கம்!
இந்நிலையில் நேற்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. அதில் தற்போது மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக மாற்றுமாறு ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட வேண்டும். 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி நிலுவையில் உள்ள ஓய்வூதிய தொகையை உடனே வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தெய்வத்திரு மான்புமிகு முதல்வர்கள் காமராஜர் ஐயா காலத்தில் படித்து கலைஞர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா தங்கள் ஆட்சி வரை ஏழைகளுக்கு பசியும் பட்டினியால் பணி செய்து
பணிஓய்வுபெற்ற பூமியில் மக்களிடம் கீழ்நிலைப்பணியிலிருந்து தற்போது உள்ள ஓய்வுபெற்ற பின்னர் டி என்பிஸி தேர்வில் தந்தை இறந்து கருணைப் பணி செய்பவர்கள் ஏழை எளிய மக்களை உடன் பணிபுரியும் கீழ்நிலை பணியாளர்களை மதிப்பதும் மக்களுக்கு எந்த அரசு பணியும் நடக்காமல் நொந்து போய் உள்ளனர் முதல்வர் கலைஞர் ஐயா போல வேலை நிர்ணயம் செய்து வேலை வாங்கவேண்டும்.இல்லையேல் முந்தைய ஆட்சிகள் போல கோயிந்தா கோயிந்தா கோயிந்தா கோயிந்தா