ஓமைக்ரான் தொற்றால் IND vs SA கிரிக்கெட் தொடர் நடைபெறுமா? தென் ஆப்பிரிக்க வாரியம் விளக்கம்!
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. ஓமைக்ரான் தொற்று பரவி வரும் சூழ்நிலையில் இத்தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்:
IND vs SA மோதும் டெஸ்ட் முதல் போட்டி டிசம்பர் 26ம் தேதி தொடங்கவுள்ளது. இம்மாதம் தொடங்கும் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதியில் முடிவடைகிறது. இத்தொடரில் மொத்தம் 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் சென்டுரினில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள இப்போட்டிகளுக்கு இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஒரே தவணையில் பொங்கல் பரிசு! அரசு உத்தரவு!
தென் ஆப்பிரிக்காவில் உருவான கொரோனாவின் மறு உருவமான ஓமைக்ரான் தொற்று அந்நாட்டு முழுவதும் அதிகமாக பரவி வருகிறது. ஓமைக்ரான் வைரஸ் பரவலால் IND vs SA போட்டிகள் நடைபெறுமா என்று ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் விளக்கம் தெரிவித்துள்ளது. இந்த கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்று அவ்வாரியம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – டிச.25க்கு முன் அகவிலைப்படி (DA) நிலுவை?
RT-PCR பரிசோதனை தினமும் விளையாட்டு வீரர்களுக்கு எடுக்கப்படும் எனவும் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று உறுதி செய்யும் வீரர்களை தனிமைப்படுத்தப்படும் என்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒமைக்ரான் தொற்று காரணமாக போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்களின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை கண்டுகளிக்க முடியாது என்று அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.