தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வூதிய வயது 60 ஆக உயர்வு – முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
2020 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 59 ஆக உயர்த்திய நிலையில், தற்போது மீண்டும் ஓய்வூதிய வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஓய்வு பெரும் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஓய்வூதிய வயது:
1979 ஆம் ஆண்டு தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 55 லிருந்து 58 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது ஓய்வூதிய வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு பின்பு தான் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது.
Cognizant நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் 18 முதல் அலுவலகம் மீண்டும் திறப்பு!
இந்நிலையில் மேலும், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தியுள்ளது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய வயதை அதிகரித்தது நல்ல செய்தியாகவே இருந்தாலும் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் அதிக அளவில் பாதிப்படையவுள்ளனர். அதாவது பல இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்த்தினால் ஓய்வு பெறப் போகும் ஊழியர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்படும். இதனால் ஒரு ஆண்டுக்கு யாருமே ஓய்வு பெறமாட்டார்கள்.
இதனால் ஒரு ஆண்டுக்கு இளைஞர்கள் அந்த வேலையில் சேர முடியாது. இதனால் மீண்டும் ஓய்வூதிய வயதை 58 ஆக குறைக்கும்படி பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓய்வூதிய வயதை 59 லிருந்து 60 ஆக திருத்தப்பட்ட அரசாணையில் கூறியதாவது, அரசு ஊழியர்கள் 60 வயதை அடைந்த மறுதினமே அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஓய்வூதியதாரர்கள் கணக்கில் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.